ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை... அதிகரிக்கும் பரபரப்பு - வீடியோ
மும்பையில் இருந்து இன்று சென்னைக்கு வரும் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் நிலவி வருகிறது.
சென்னை: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன்பிறகு தமிழக அர்சியலில் தினம்தோறும் வகைவகையான் காட்சிகல் அரங்கேறி வருகின்றன.

ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக அதிமுக அம்மா, அதிமுக புரட்சி தலைவி அம்மா என இரு அணிகளாகப் பிரிந்தன. அதனையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னும் இழுபறியாகக் கிடந்த அணிகள் இணைப்பு, கடந்த மாதம் 21ஆம் தேதி ஒன்றானது.
இந்த இணப்பு தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் புயலைக் கிளப்பியது. அதனையடுத்து அவர்கள் ஆளுநர் வித்யசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
அதிமுகவின் உள்கட்சிக்குள் பூசல் நிலவி வந்த நிலையில், எதிர்க்கட்சியான் அதிமுகவும் கடந்த மாதம் 27ஆம் தேதி ஆளுநரை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
ஆனால், ஆளுநர் இதுவரை இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் அனைவரும் உள்ளனர். மேலும், இதே கோரிக்கைகளுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பும், திமுகவும் வழக்குத் தொடர்ந்தன.
எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல்முனை தாக்குதல்கள் நடந்து வரும் சூழ்நிலையில், பொறுப்பு ஆளுநர் மும்பையில் இருந்து சென்னை வருகிறார். தற்போது தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications