ஆளுநர் ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார்... வெங்கையா நாயுடு உறுதி
ஆளுநர் வித்யாசாசகர் ராவ் தமிழக அரசியல் நிலவரத்தை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக அரசியல் நிலவரத்தை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஆளுநர் தான் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரதிநிதி என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்தார். அப்போது ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்ட முறைகளை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார் என அவர் கூறினார்.
ஆளுநர் தான் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரநிதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரச்சனையில் பிறரை குற்றம் சாட்டுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications