நெல்லையில் பரவும் டெங்கு.. அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் கொசுவலை கட்டுகிறார்கள்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் கொசு வலை பொருத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த வருடம் கடையநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கொசுவினால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலர் பலியாகினர். தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்ததால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் இந்தாண்டு விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி 15க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து சுகாதாரதுறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு நிலை்மைகளை கண்காணித்து வருகின்றனர். காய்ச்சலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சலால் குழந்நதைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இந்த மருத்துவமனையில்குழந்சதைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 50 சதவீத்திற்கும் மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுளளனர். குறிப்பாக டெங்கு, மூளை காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ தாக்குதல் இருப்பது தெரிய வந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களை மேலும் கொசுக்கள் தாக்காமல் இருக்க அந்த வார்டில் மட்டும் குழந்தைகளை சுற்றி கொசு வலை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மருத்துவ கல்லூரி டீன் துளசிராம் அந்த வார்டை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். தற்போது நெ்ல்லை மாவட்டத்திலும் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர்.