தொழிலாளர்கள் தயார் என்றால் அரசும் பேச்சுவார்த்தைக்கு தயார்... அமைச்சர் விஜயபாஸ்கர்

பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து தொழிலாளர்கள் தயாராக உள்ளனர் என்றால் தமிழக அரசும் தயாராக உள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலுவைத் தொகை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்து தொழிலாளர்கள் தயாராக இருந்தால் அரசும் தயார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ரூ.7,000 கோடி நிலுவைத் தொகை கேட்டு தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் நேற்று முதல் தொழிலாளர்கள் பஸ்களை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Govt is ready to conduct further talks: Minister Vijayabaskar

இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பல்லவன் பணிமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் 2000 தனியார் பஸ்களும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. மக்களுக்கு இடையூறின்றி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர்கள் தயார் என்றால் தமிழக அரசும் தயாராக உள்ளது. நிலுவைத் தொகையை அளிப்பதாக உறுதிமொழி அளித்தபின்பும், அதை ஏற்காமல் தொழிலாளர்கள் எழுத்துப்பூர்வமாக கேட்பது எந்தவிதத்திலும் சரியல்ல. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+