தமிழகத்தில் நடப்பது ஆட்சியே இல்லை.. உடனடியாக கலைக்க வேண்டும்... தீபா ஆவேசம்!
தமிழகத்தில் ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடப்பது ஆட்சியே இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று திடீரென போயஸ் கார்டனுக்கு வருகை தந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் போயஸ்கார்டனில் திரண்டு போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர். போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
தன்னை தாக்கிய தீபக்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தீபக் அழைத்ததால் தான் வந்ததாக கூறினார். ஆனால் வரவழைத்து தீபக் குண்டர்களுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார்.
பணத்துக்காக கொன்றான்
சசிகலா கும்பலோடு சேர்ந்து தீபக் தனது அத்தை ஜெயலலிதாவை பணத்துக்காக கொன்றதாகவும் அவர் கூறினார். மேலும் தன்னை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வசை மாரி பொழிந்த தீபா
மேலும் தீபக்கை மனுஷனே இல்லை, புறம்போக்கு என்றெல்லாம் தீபா வசை மாரி பொழிந்தார். இதுகுறித்து பிரதமரிடம் புகார் அளிப்பேன் என்றும் அவர் கூறினார்.
ஆட்சியை கலைக்க வேண்டும்
தமிழகத்தில் நடப்பது ஆட்சியே இல்லை. இந்த ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் சசிகலாவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றும் தீபா தெரிவித்தார்.