கஜானாவை நோக்கி போய் பயனில்லை - யாரை கலாய்கிறார் எஸ்.வி.சேகர் அதிமுகவையா...? கமலையா..?
கமல் கஜானாவை நோக்கி பயணம் மேற்கொண்டு எந்த பயனுமில்லை என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்
சென்னை: கமலஹாசன் கஜானாவை நோக்கி பயணம் செய்தும் எந்த பயனுமில்லை என்று தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், அந்த கஜானா ஏற்கனவே காலியாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று ரசிகர்களை சந்தித்த கமல், நம் இலக்கு கஜானாவை நோக்கி அல்ல மக்களின் முன்னேற்றத்தை நோக்கி இருக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.வி.சேகர், கமல்ஹாசன் கஜானாவை நோக்கிச்சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கஜானாவை நோக்கிச் சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சும். அது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு ஓராண்டு திவசமும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது " என தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஜெயலலிதா இறந்த ஒரு வருடம் முடிந்த நிலையில், அவர் இறந்தவுடனே அதிமுகவினர் அந்த கஜானாவை காலி செய்து முடித்து விட்டனர் என்று பொருள்படி எஸ்.வி.சேகர் எழுதி இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
#கமல்ஹாசன் #Kamalhassan கஜானாவை நோக்கிச்சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சும். அது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு ஓராண்டு திவசமும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. 😜😜 pic.twitter.com/gQwBDqKiCX
— S.VE.SHEKHER (@SVESHEKHER) January 24, 2018
சமீபகாலமாக ரஜினியை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்துக்கொண்டிருந்த பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கமலின் ரசிகர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.வி.சேகரின் இந்த டுவிட்டிற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.