For Daily Alerts
Just In
மழை வெள்ள நிவாரணப் பணிக்களுக்காக ஒருநாள் ஊதியத்தை வழங்க அரசு அலுவலக உதவியாளர் சங்கம் முடிவு
சென்னை: தமிழகத்தினை மழை வெள்ளம் புரட்டிப் போட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க உறுப்பினர்கள் ஒரு நாள் ஊதியத்தை மழை நிவாரணப் பணிக்கு வழங்க முன்வந்துள்ளனர்.
இது குறித்து அப்பணியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேசன், ''எங்கள் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தில் கிட்டத்தட்ட 2.24 லட்சம் நிரந்தர உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்களின் ஒரு நாள் ஊதியத்தை மழைக்கால நிவாரணப் பணிக்காக பிடித்தம் செய்து கொள்ளும் படி அரசிடம் தெரிவித்துள்ளோம்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் அரசு அலுவலர் ஒன்றிய சங்கத் தலைவர் சண்முகராஜனும் சங்கத்தில் உள்ள 4 லட்சம் உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க சம்மதம் தெரிவித்து அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
Comments
English summary
Govt officials donates their one day salary to rain Monsoon Relief.
Story first published: Wednesday, November 18, 2015, 10:17 [IST]