For Daily Alerts
Just In
"அம்மா" மீண்டும் தமிழகத்தை ஆட்சி செய்வார்... ஜெ. விரைவில் நலம்பெற தேவகவுடா வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற முன்னாள் பிரதமர் தேவகவுடா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா தமிழக அரசின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறிவருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியா மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கின்றனர். முதல்வர் விரைவில் முழு நலம் பெற என்னுடைய வாழ்த்துக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாழ்த்து.
"அம்மா" மீண்டும் தமிழ்நாட்டை ஆட்சி செய்வார். கடவுளும் இன்னொரு முறை அவர் ஆட்சி செய்யும் வாய்ப்பு கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Former PM H D Deve Gowda on Sunday wished speedy recovery of Tamil Nadu Chief Minister J Jayalalithaa.
Story first published: Monday, October 10, 2016, 8:31 [IST]