“ஜிபிஎஸ்” வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள்- விரைவில் தமிழகத்தில் அறிமுகம்!
சென்னை: தமிழகத்தில் விபத்துகளில் சிக்கி போராடுபவர்களை காக்கும் ஆம்புலன்ஸ்களுக்கான ஜிபிஎஸ் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ மற்றும் சாலை விபத்துகளில் உயிருக்கு போராடுகிறவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கின்ற பணியை 108 ஆம்புலன்ஸ் செய்து வருகிறது.
தற்போது பொது மக்கள் பிரசவம், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

24 மணி நேர சேவை:
தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் இலவசமாக இச்சேவை அறிவிக்கப்படுவதால் பொது மக்கள் அதிகளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

நவீன தொழில்நுட்பம்:
தினமும் 22 ஆயிரம் அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகின்றன. தற்போதைய சேவையை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலதாமதத்தைத் தடுக்க:
சென்னையில் உள்ள கட்டுபாட்டு அறையில் உள்ளவர்களும் முழு விவரங்களும் பெற்ற பின்னர் ஆம்புலன்ஸ் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து தகவல் தெரிவித்து அனுப்பப்படுகிறது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது.

ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம்:
அதனை தடுக்கும் வகையில் நவீன ஸ்மார்ட் போனில் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் மூலம் 108 க்கு போன் செய்தவுடன் அவர் எங்கிருந்து பேசுகிறார், எந்த பகுதியில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்பதை காட்டக் கூடிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஜிபிஎஸ் வசதி:
மேலும் ஆம்புலன்ஸ் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த ஜி.பி.எஸ். வசதி உதவுகிறது.

எளிமையாகும் வசதி:
இது தவிர அருகில் உள்ள மருத்துவ மனையை காட்டும் வசதியும், இதன் மூலம் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் இதன் மூலம் பெற முடியும். இந்த 3 சிறப்புகளும் இதன் மூலம் கிடைப்பதால் கால விரயம் வெகுவாக குறைகிறது.

பேரிடர் காலங்களில் அவசியம்:
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க இது பெரிதும் பயன்படும். பேரிடர் காலங்களில் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications