“ஜிபிஎஸ்” வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள்- விரைவில் தமிழகத்தில் அறிமுகம்!
சென்னை: தமிழகத்தில் விபத்துகளில் சிக்கி போராடுபவர்களை காக்கும் ஆம்புலன்ஸ்களுக்கான ஜிபிஎஸ் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ மற்றும் சாலை விபத்துகளில் உயிருக்கு போராடுகிறவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கின்ற பணியை 108 ஆம்புலன்ஸ் செய்து வருகிறது.
தற்போது பொது மக்கள் பிரசவம், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

24 மணி நேர சேவை:
தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் இலவசமாக இச்சேவை அறிவிக்கப்படுவதால் பொது மக்கள் அதிகளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

நவீன தொழில்நுட்பம்:
தினமும் 22 ஆயிரம் அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகின்றன. தற்போதைய சேவையை மேம்படுத்தும் வகையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலதாமதத்தைத் தடுக்க:
சென்னையில் உள்ள கட்டுபாட்டு அறையில் உள்ளவர்களும் முழு விவரங்களும் பெற்ற பின்னர் ஆம்புலன்ஸ் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து தகவல் தெரிவித்து அனுப்பப்படுகிறது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது.

ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம்:
அதனை தடுக்கும் வகையில் நவீன ஸ்மார்ட் போனில் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் மூலம் 108 க்கு போன் செய்தவுடன் அவர் எங்கிருந்து பேசுகிறார், எந்த பகுதியில் இருந்து அழைப்பு வந்துள்ளது என்பதை காட்டக் கூடிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஜிபிஎஸ் வசதி:
மேலும் ஆம்புலன்ஸ் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த ஜி.பி.எஸ். வசதி உதவுகிறது.

எளிமையாகும் வசதி:
இது தவிர அருகில் உள்ள மருத்துவ மனையை காட்டும் வசதியும், இதன் மூலம் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் இதன் மூலம் பெற முடியும். இந்த 3 சிறப்புகளும் இதன் மூலம் கிடைப்பதால் கால விரயம் வெகுவாக குறைகிறது.

பேரிடர் காலங்களில் அவசியம்:
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க இது பெரிதும் பயன்படும். பேரிடர் காலங்களில் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும்.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications