கிரானைட் முறைகேடு: சகாயம் அறிக்கை தாக்கல் அக்டோபர் 15 வரை ஹைகோர்ட் அவகாசம்
மதுரை: மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி கிரானைட் முறைகேடு பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி முதல், மதுரையில் முகாமிட்டு, கிரானைட் முறைகேடுகள் குறித்து, சகாயம் விசாரித்து வருகிறார். இதுவரை 20 கட்டங்களாக சகாயம் விசாரணை நடத்தியுள்ளார். இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, பல முறை, சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

நரபலி தொடர்பான புகாரை அடுத்து சகாயம் தலைமையில் கடந்த 13ம் தேதி மேலூர் அருகே உள்ள மலம்பட்டி சுடுகாட்டில் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரு குழந்தை உள்பட 4 பேரின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியது.
போலி ஆவணங்கள் மூலம், துாத்துக்குடி துறைமுகம் வழியாக, கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதும், சுங்கவரி ஏய்ப்பு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், சகாயம், விசாரணை குழுவினருடன், நேற்று துாத்துக்குடி சென்று, துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் சுங்க அதிகாரிகளிடம் விசாரித்தார். கிரானைட் முறைகேடுகள் குறித்த விசாரணை முடிந்துவிட்டதாக சகாயம் நேற்று அறிவித்த நிலையில் இன்று அறிக்கை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்ட்டது.
இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம் அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட ஆணையர் சகாயம் இன்று மனுத் தாக்கல் செய்தார். விசாரணை முடிந்து விட்டதால் ஆவணங்களை சரிபார்க்க அவகாசம் தேவை என்றும், விசாரணை அறிக்கை ஆவணங்கள் 12 ஆயிரம் பக்கங்களாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று நண்பகலில் விசாரணைக்கு வந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி, மேலும் 4 வாரகாலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். சகாயத்துக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை, அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, நரபலி தொடர்பான புகாரை காவல்துறையினர் தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் புகார் அளித்த சேவற்கொடியோனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications