கிரானைட் முறைகேடு: சகாயம் அறிக்கை தாக்கல் அக்டோபர் 15 வரை ஹைகோர்ட் அவகாசம்
மதுரை: மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி கிரானைட் முறைகேடு பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி முதல், மதுரையில் முகாமிட்டு, கிரானைட் முறைகேடுகள் குறித்து, சகாயம் விசாரித்து வருகிறார். இதுவரை 20 கட்டங்களாக சகாயம் விசாரணை நடத்தியுள்ளார். இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, பல முறை, சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

நரபலி தொடர்பான புகாரை அடுத்து சகாயம் தலைமையில் கடந்த 13ம் தேதி மேலூர் அருகே உள்ள மலம்பட்டி சுடுகாட்டில் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரு குழந்தை உள்பட 4 பேரின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியது.
போலி ஆவணங்கள் மூலம், துாத்துக்குடி துறைமுகம் வழியாக, கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதும், சுங்கவரி ஏய்ப்பு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், சகாயம், விசாரணை குழுவினருடன், நேற்று துாத்துக்குடி சென்று, துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் சுங்க அதிகாரிகளிடம் விசாரித்தார். கிரானைட் முறைகேடுகள் குறித்த விசாரணை முடிந்துவிட்டதாக சகாயம் நேற்று அறிவித்த நிலையில் இன்று அறிக்கை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்ட்டது.
இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம் அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட ஆணையர் சகாயம் இன்று மனுத் தாக்கல் செய்தார். விசாரணை முடிந்து விட்டதால் ஆவணங்களை சரிபார்க்க அவகாசம் தேவை என்றும், விசாரணை அறிக்கை ஆவணங்கள் 12 ஆயிரம் பக்கங்களாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று நண்பகலில் விசாரணைக்கு வந்தது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி, மேலும் 4 வாரகாலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். சகாயத்துக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை, அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, நரபலி தொடர்பான புகாரை காவல்துறையினர் தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் புகார் அளித்த சேவற்கொடியோனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications