இன்று மாலை பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு!
அதிமுக அணிகள் இணைவதால், அதன்பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஈரோடு: அதிமுக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய உள்ள பெரிய அரசியல் மாற்றம் இன்று மாலை நடக்க உள்ளது எனக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் வெள்ளாளபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
" தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைய உள்ள பெரிய மாற்றம் இன்று மாலை நடக்க உள்ளது. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இன்று மாலை இணைகின்றன. இந்த அரசியல் மாற்றம் அ.தி.மு.க.தொண்டர்களுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணையும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அ.தி.மு.க.வை., இந்த அரசை யாரும் அசைக்க முடியாது. இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டு அல்ல 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். யாரும் எதுவும் செய்ய முடியாது." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications