குரூப் -1 பணிக்கு விண்ணப்பித்தவர்கள் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 1 தேர்விற்கான விண்ணப்பதாரர்களின் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்விற்கு கிட்டதட்ட 1.65 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவ்விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமானது துணை -ஆட்சியர் உட்பட 79 காலி பணியிடங்களை குரூப் - 1 தேர்வு நிரப்ப உள்ளது.

இப்பணிகளிக்கான எழுத்துத் தேர்வானது வரும் ஜூலை 20 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தோரின் விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை உரிய முறையில் பதிவு செய்து, சரியான விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், சரியான முறையில் பதிவு செய்திருந்தாலும் விவரங்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்கள் தங்களுடைய முழு விவரங்களையும் விண்ணப்ப நகலுடன் பதிவு செய்து [email protected] என்ற இணையதள முகவரிக்கு வருகின்ற 8 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா செய்தி வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+