Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் தலித்கள் மீது தாக்குதல், மாயாவதி மீதான விமர்சனம்- 25-ல் வி. சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் மாயாவதி இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் ஜூலை 25-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்:

குஜராத் மாநிலத்தில் செத்த மாடு ஒன்றின் தோலை அகற்றியதாகச் சொல்லி பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் இந்து மதவெறியர்கள், நான்கு தலித்துகளை உணா என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் படுபயங்கரமாகத் தாக்கியுள்ளனர். அதையொட்டி குஜராத் மாநிலம் முழுவதும் தலித் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர்.

Gujarat dalit attack, BJP leader Remarks on Mayawati - Thiruma contemns

தலித்துகள் பலர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் எதிரொலித்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குஜராத் தாக்குதலைக் கண்டித்து மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்தப் போராட்டங்களின் விளைவாக குஜராத் மாநிலத்தில் தலித்துகளைத் தாக்கியவர்கள் எனச் சிலரைக் கைது செய்தும் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்தும் குஜராத் மாநில பா.ஜ.க. அரசு கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது.

தலித்துகளைத் தாக்கியவர்கள் அனைவரையும் அதேபோன்று பொது இடத்தில் நிறுத்தி தண்டிக்கும்வரை ஓயமாட்டோம் என குஜராத் தலித் மக்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுடைய போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் வேறு பல பெயர்களிலும் செயல்படும் இந்து மதவெறி அமைப்புகள் அனைத்தையும் தடைசெய்ய வேண்டுமென்றும் அவற்றை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்க வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

குஜராத் தாக்குதலைக் கண்டித்ததற்காக செல்வி மாயாவதி அவர்களை உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் சொல்ல நாக்கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ளார். அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
குஜராத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தலித் மக்கள் மீதான சாதி, மதவெறி தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு சாதிவெறி மதவெறி அமைப்புகள் ஊக்கம் பெற்று இந்தத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் செங்கத்தில் தலித் குடும்பத்தினரை நடுரோட்டில் மிருகத்தனமாக போலீசார் தாக்கிய கொடுமை நடந்துள்ளது. ஆணவக் கொலைகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் செல்வி மாயாவதி இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்தும் எனது தலைமையில் எதிர்வரும் ஜூலை 25-ந் தேதி சென்னையில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+