சென்னையில் பயங்கரம்.... குஜராத் மின் நிறுவன அதிகாரி படுகொலை.. 2 பேர் கும்பல் வெறிச்செயல்
சென்னை: சென்னையில் வசித்து வந்த குஜராத்தைச் சேர்ந்த மின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் நேற்று இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது பெயர் வெங்கடேஸ்வரலு. 51 வயதான அவர் ஒரு மின் பகிர்மான நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்து வந்தார். நேற்றிரவு 9.30 மணியளவில் மருந்தகத்தில் மருந்து வாங்க வந்த அவரை கண நேரத்தில் குமரன் காலனியில் வைத்து தாக்கியுள்ளனர் மர்ம நபர்கள் 2 பேர்.

அவருக்காக காரில் காத்துக் கொண்டிருந்த டிரைவர் ஆறுமுகம் வெகு நேரமாகியும் வெங்கடேஸ்வரலு திரும்பி வராத காரணத்தினால் சென்று பார்த்து வெங்கடேஸ்வரலு தாக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மருந்துகளை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தபோது, பைக்கில் வந்த இரண்டு பேர் வெங்கடேஸ்வரலு தலையில் பலமாக தாக்கியுள்ளனர். அதனால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வெங்கடேஸ்வரலுக்கு மனைவி சுசித்ரா, சோனு சின்னு என்னும் பொறியியல் படிக்கும் மகனும், சாய் கிருஷ்ணா என்னும் 11 வகுப்பு மாணவனான மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications