குரு பெயர்ச்சி விழா: பாடி திருவலிதாயம் ஆலயத்தில் குரு பகவானுக்கு லட்சார்ச்சனை
சென்னை: குருபெயர்ச்சியை முன்னிட்டு சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை விழா 3 நாட்கள் நடைபெற உள்ளது . ஆகஸ்ட் 01 முதல் 3ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி ஆகஸ்ட் 02ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி எனும் தேவ குருவாகிய வியாழ பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார். 01.09.2017 வரை கன்னி ராசியில் இருப்பார் குருபகவான். இந்த குருபெயர்ச்சிக்கு மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகள் குரு பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டிய ராசிகள் ஆகும்.

சென்னை பாடியில் உள்ள அருள்மிகு திருவல்லீஸ்வரர் (திருவலிதாயம்) கோவில் உள்ளது. இந்த கோவில் குரு பகவானுக்கு மிகவும் விசேஷமானது. சென்னையில் குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ள கோவில் இது மட்டுமே. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த குருபெயர்ச்சியை முன்னிட்டு லூகாஸ் திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை விழா 3 நாட்கள் நடைபெற உள்ளது. 01.08.2016 (திங்கள்), 02.08.2016 (செவ்வாய்), 03.08.2016 (புதன்) ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.
02.08.2016 (செவ்வாய்) குருபெயர்ச்சி அன்று மட்டும் குரு பரிகார ஹோமம் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. சாந்தி பரிகாரம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-26540706 இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யோக தட்சிணாமூர்த்தி
திருவள்ளூரை அடுத்த பூங்கா நகரிலுள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி கோயிலில் ஆகஸ்ட் 2ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. யோக ஞான தட்சிணாமூர்த்தி கோயிலில் அன்று காலை 6 மணிக்கு லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், அஸ்திர ஹோமம் நடைபெறும். காலை 8 மணிக்கு பால் குட அபிஷேகம், தொடர்ந்து காலை 9.27 மணிக்கு மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications