குட்கா ஊழல்: அதிமுகவை இறுக்கும் மத்திய அரசு.. குழப்பத்தில் எடப்பாடி.. அடுத்து என்ன நடக்கும்?

குட்கா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது அமைச்சரவைக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குட்கா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது அமைச்சரவைக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நேற்று முதல் நாள் தமிழக அரசை சிபிஐ ரெய்டு மொத்தமாக ஆட்டிப்படைத்து . தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. சிபிஐ அதிகாரிகள் 450 பேர் இதில் ஈடுபட்டார்கள்.

மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.

கண்டிப்பாக கைதுக்கு வாய்ப்பு

கண்டிப்பாக கைதுக்கு வாய்ப்பு

இந்த சிபிஐ ரெய்டு காரணமாக, அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இது வருமான வரிசோதனை கிடையாது, சிபிஐ சோதனை. அதனால், கண்டிப்பாக சிபிஐ இந்த வழக்கில் சிக்கி இருக்கும் எல்லோரையும் கைது செய்ய வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். விஜயபாஸ்கர் கைதாகும் பட்சத்தில் அவர் தொடங்கி டிஜிபி வரை எல்லோரும் பதவி விலக வேண்டிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஆட்சி கவிழ்ப்பு வரை செல்லும்

ஆட்சி கவிழ்ப்பு வரை செல்லும்

விஜயபாஸ்கர் கைதானாலோ, பதவி விலகினாலோ அவர் கட்சிக்குள் கிளர்ச்சி செய்ய வாய்ப்பு உள்ளது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆம், கட்சிக்குள் ஏற்கனவே ஜெயக்குமார் தரப்பும் மதுசூதனன் தரப்பும் மோதிக்கொண்டு இருக்கிறது. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவர் கிளர்ச்சி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆட்சி கவிழும் நிலை வரை செல்லும் என்றும் கூறுகிறார்கள்.

பெரிய குழப்பத்தில் எடப்பாடி

பெரிய குழப்பத்தில் எடப்பாடி

18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு ஏற்கனவே அரசுக்கு எதிராக வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கட்சிக்குள் உள்ள எல்லா உறுப்பினர்களும் மிகவும் நட்புடன் இருக்க வேண்டும். ஆனால், தற்போது அதிமுகவில் அப்படிப்பட்ட நிலை நிகழவில்லை. இந்த சிபிஐ ரெய்டு அதை மேலும் கிளறிவிட்டு இருக்கிறது. இதனால் ஆட்சி கவிழும் பதட்டத்தில் பெரிய குழப்பத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தகவல் வருகிறது.

மத்திய அரசு என்ன திட்டம்

மத்திய அரசு என்ன திட்டம்

மத்திய அரசுக்கு பல விஷயங்களில் அதிமுக அரசு மீது கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக செய்யும் தவறுகளுக்கு எல்லாம் தங்களுத்தான் கெட்ட பெயர் வருகிறது என்று பாஜக தேசிய தலைமை கருதுவதாக தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அதிமுகவை பாஜக இயக்குகிறதா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது இந்த தொடர் பிரச்சனைகளால் சிபிஐ ரெய்டு முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+