அரசு ஊழியர்களுக்கு நிம்மதி.. பழைய ஓய்வூதியத்துக்கான வல்லுநர் குழு பதவி காலம் நீட்டிப்பு!

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் வல்லுநர் குழு பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வல்லுநர் குழு அமைத்து ஓய்வு திட்டம் குறித்து பரிசீலிப்போம் என்று சொல்லியிருந்தார் முதல்வர் ஜெயலலிதா.

அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழுவை அமைத்தார். இதில், நிதித்துறை அதிகாரி ஒருவரை உறுப்பினர் செயலாளராகவும், வெளியிலிருந்து 3 வல்லுநர்களை உறுப்பினர்களாகவும் நியமித்தனர்.

Gvt employees expert committe tenure has been extended to another 3 months

இதன் ஆயுள் காலம் 3 மாதங்கள். ஆனால், ஒரேஒரு முறைதான் இந்த குழு கூடியது. அதற்குள் ஆயுள் காலம் முடிய, மேலும் 3 மாதங்கள் நீட்டித்து 4 மாதங்களுக்கு முன்பு ஆணை பிறப்பித்தது நிதித்துறை. இந்த நிலையில், அரசு ஊழியர் சங்கங்கள் சிலவற்றை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது வல்லுநர் குழு.

ஆனாலும் அதில் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படமுடியவில்லை. இந்தச்சூழலில், அதன் ஆயுள் காலம் கடந்த செப்டம்பர் 26 -ந்தேதியோடு முடிந்து போனது. செப்டம்பர் 22-ந்தேதி அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டானதால் வல்லுநர் குழுவின் காலம் நீட்டிப்பு குறித்து எந்த முடிவையும் அதிகாரிகளால் எடுக்க முடியவில்லை. விரைவில் வீடு திரும்பி விடுவார் என்கிற நம்பிக்கையில் இது குறித்து அக்கறைக்காட்டவில்லை அதிகாரிகள்.

டிசம்பர்க்குள் கால நீட்டிப்பு செய்யப்படவில்லையெனில் குழு கலைந்துவிடும் என்பதால், தற்போது வல்லுநர் குழுவின் ஆயுளை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஆணைப்பிறப்பித்துள்ளது நிதித்துறை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+