சென்னை கலவரத்துக்கு ஸ்டாலின் தூண்டுதலே காரணம்: எச். ராஜா குற்றச்சாட்டு
சென்னையில் நடந்த கலவரத்துக்கு மு.க.ஸ்டாலினின் தூண்டுதலே காரணம் என எச்.ராஜா கூறியுள்ளார்.
சிதம்பரம்: சென்னையில் நடந்த கலவரத்திற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தான் காரணம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 1962-ல் தனி திராவிடம் கேட்டு போராட்டம் நடைபெற்றது. அதற்கு திராவிட கட்சிகள் துணை நின்றன. அதேபோல் தற்போது தனி அமைப்புகளையும், மாணவ அமைப்புகளையும் சீமான் தூண்டிவிட்டு தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. பிரிவினைவாதம் பேசும் சீமானை தேசவிரோத வழக்கில் கைது செய்யவேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கெயில்குழாய் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கியது தி.மு.க. தான். இந்த திட்டத்தை மோடி அரசு தடை செய்தது. கடந்த காலங்களில் திராவிட கட்சிகள் தான் தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்தது. ஆனால் தற்போது மோடி அரசு மீது பழி போடுகிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் முடிவில் சென்னையில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என எச்.ராஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications