காவிரி மேலாண்மை வாரியம் வரும்... பொறுமையா இருங்க! - சொல்லிட்டாரு எச் ராஜா
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஏற்க மறுத்து கர்நாடகத்துக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது மத்திய மோடி அரசு.
இந்திய வரலாற்றில் இத்தனை வெளிப்படையாக மத்திய அரசு ஒரு மாநிலத்துக்கு (தமிழகத்துக்கு) துரோகம் இழைத்ததில்லை என்று அத்தனை அரசியல் தலைவர்களும் சொல்லும் அளவுக்கு ஒருதலைப்பட்சமான செயல்பாடு இது.

ஆனால் மோடி அரசின் துரோகத்தை பூசி மெழுகி வருகின்றனர் தமிழக பாஜக தலைவர்கள்.
முன்பு தமிழிசை இந்தப் பழியைத் தூக்கி திமுக மீது போட்டுவிட்டுப் போனார். அவர் வழியைப் பின்பற்றி, அதே பல்லவியைப் பாடியுள்ளார் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா.
நாகை அருகேயுள்ள திருக்கடையூரில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காவிரி பிரச்னையில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது திமுகதான். தஞ்சாவூரில் விவசாயிகளுக்காக ஸ்டாலின் நடத்தவுள்ள போராட்டம் நாடகமே. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே, இப் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்கக் கூடாது.
தேவையெனில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, இந்தப் போராட்டத்தை திமுக நடத்தட்டும்.
மத்திய அரசு சட்டப்பூர்வமான காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்கும். விவசாயிகள் அதுவரை பொறுமை காக்க வேண்டும்," என்றார்.
-
கருணாநிதி வென்றது எப்படி? நெடுஞ்செழியன் வீழ்ந்தது எப்படி? சூழ்ச்சியா? முயற்சியா? -
மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
“ரஜினியை மிரட்ட முடியாது.. யாருக்கும் அடிபணிய மாட்டார்” - தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்!












Click it and Unblock the Notifications