ஜல்லிக்கட்டு விவகாரம்.. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது எச். ராஜா கடும் தாக்கு !
ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறாமல் போனதற்கு திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் தான் காரணம் என எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
நாகர்கோவில்: ஜல்லிகட்டுக்கு போராட்டம் நடத்த போவதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருப்பது பச்சை பித்தலாட்டம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், கேரளாவில் கோழிகோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ரூ 201 கோடி பண பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. இது அங்குள்ள ஆளும் கட்சியான இடதுசாரி கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மூலமாக தான் இது நடந்திருக்கிறது.

இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத அவர்கள் மத்திய அரசு சபரிமலையில் பக்கதர்களுக்கு ஏற்படுத்தியுள்ள வசதிகளை நடைமுறை படுத்தாததால் தான் அங்குள்ள பக்கதர்கள் பாதிப்பதற்கு காரணம். என்றும் காவிரி பிரச்சனையாக இருந்தாலும் சரி ஜல்லிகட்டு பிரச்சனையாக இருந்தாலும் சரி அதற்கு காரணம் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சி தான்.
கருப்பு பணத்திற்கு எதிராக போர் நடைபெற்று வரும் வேளையில் வங்கி ஊழியர்களின் சங்க தலைவர்கள் 3 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருப்பது தேசதுரோக செயல். இலங்கை அகதிகள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என பாஜக மட்டும் கூற வில்லை காங்கிரஸ் கட்சியும் முன்னால் கூறி இருக்கிறது.
தமிழகத்திற்கு விடியல் வேண்டுமென்றால் திராவிட கட்சிகள் அஸ்தமணமாக வேண்டும். சோனியா காந்தி, கருணாநிதி உள்ளிட்டோர் இணைந்து ஜல்லிக்கட்டை குழிதோண்டி புதைத்தார்கள் அவர்களின் வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தினால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும். ஸ்டாலின் போராட்டம் அறிவித்து இருப்பது பச்சை பித்தலாட்டம் எனவும் அவர் தெரிவித்தார்.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?












Click it and Unblock the Notifications