மோடி சொன்னதை சொந்த கருத்தாக ட்வீட்டிய எச். ராஜா
சென்னை: வடகிழக்கு மாநிலங்களில் திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றது குறித்து மோடி சொன்ன கருத்தை அப்படியே அச்சுபிசறாமல் தன் சொந்த கருத்தாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

மேலும் நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து மோடி டெல்லியில் பேசியிருந்தார். பின்னர் மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை ஆகும். ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்கவேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது. இனி இந்தியாவிற்கு என்றுமே வெற்றிதான்
— H Raja (@HRajaBJP) March 3, 2018
அவர் அந்த நேரத்தில் பேசிய கருத்தை அப்படியே அர்த்தம் மாறாமல் தனது சொந்த கருத்து போல் டுவிட்டரில் எச்.ராஜா பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் வடகிழக்கு என்பது ஈசான்ய மூலை ஆகும். ஈசான்ய மூலையில் பூஜை அறை இருக்கவேண்டும். இன்று இந்தியாவின் ஈசான்ய மூலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு நாட்டின் பூஜை அறை தெய்வீகம் பெற்றுள்ளது. இனி இந்தியாவிற்கு என்றுமே வெற்றிதான் என்று தெரிவித்துள்ளார்.
இதுபோல் காப்பியடித்து ராஜா டுவீட்டியது குறித்து நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications