அசிங்க, அசிங்கமாக எழுதி, மைலாப்பூர் மேம்பாலத்தில் கட்டி தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை
Recommended Video

சென்னை: சென்னையின், மைலாப்பூர் ஜி.கே. மூப்பனார் மேம்பாலத்தில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உருவ பொம்மை தொங்கவிடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அச்சு அசலாக ராஜாவின் முகம், உருவ அமைப்பை போல உருவாக்கப்பட்ட அந்த பொம்மையை யாரோ இன்று மேம்பாலத்தில் தூக்கி போட்டிருந்தனர். அதன் மீது கடுமையான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

திமுக எம்.பி. கனிமொழி பற்றி தகாத வகையில் டுவிட்டரில் நேற்று கருத்து வெளியிட்டிருந்தார் ராஜா. இதையடுத்து திமுக சார்பில் இன்று மாலை அவர் உருவப் படத்திற்கு எச்சில் துப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.
இதனிடையே மேம்பாலத்தில் ராஜா உருவ பொம்மை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் அங்கே சென்ற போலீசார், ராஜா உருவ பொம்மையை அகற்றினர்.
இதனிடையே, பாஜகவுக்கு தேர்தல் பணியாற்றுவதற்காக ராஜா கர்நாடகா சென்றுள்ளார். இதை டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். சாரணர் இயக்க தேர்தலில் கூட வெல்ல முடியாத நிலையில், கர்நாடகாவில் ராஜா பிரச்சாரம் செய்தா பாஜக வெற்றி பெறப்போகிறது என திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications