For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்: எச்.ராஜா தகவல்

|

புதுக்கோட்டை: நூறு நாள் வேலை உறுதி திட்டத்தை பாஜக ஆட்சியில் அமர்ந்ததும் நிறுத்தி விடுவார்கள் என பிரச்சாரம் செய்து வரும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தர உள்ளதாக பா.ஜ.க. மாநில துணைத் தலைவரான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

H.Raja to file complaint against P.Chidambaram

இது தொடர்பாக புதுக்கோட்டைக்கு வந்த எச்.ராஜா செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:-

அ.தி.மு.க. விற்கும் எங்களுக்கும்தான் போட்டி இருந்து வருகிறது. மற்ற கட்சிகளை பா.ஜ.க. ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மத்தியில் மோடி பிரதமராக வருவதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கங்கை காவிரி இணைப்பு பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தற்போது நடந்து வரும் நூறு நாள் வேலை உறுதி திட்டம் பற்றி தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. கூறவில்லை. எனவே, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என்று ப.சிதம்பரம் பிரசாரம் செய்கிறார். இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

English summary
The BJP Tamilnadu vice president H.Raja has decided to file complaint against the union finance minister P.Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X