பெரியார் சிலையை அகற்றுவோம் என எச் ராஜா பேசியது காட்டுமிராண்டித்தனம்: ரஜினி கருத்து
பெரியார் சிலையை அகற்றுவோம் என்று எச் ராஜா பேசியது காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பெரியார் சிலையை அகற்றுவோம் என்று எச் ராஜா தனது பேஸ்புக்கில் பதிவு செய்தது காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.
திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் அங்குள்ள லெனின் சிலைகள் அகற்றப்பட்டன. இதுபோல் தமிழகத்திலும் திராவிட கட்சிகளின் ஆட்சிகள் முடிவுக்கு வரும்.
அப்போது தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைத்தெடுக்கப்படும் என்று எச் ராஜாவின் பேஸ்புக் கணக்கிலிருந்து பதிவு வெளியானது. இதற்கு தமிழக திராவிட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

கைது செய்ய வேண்டும்
மேலும் எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் போராட்டம்
தமிழகம் முழுவதும் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. அவரது உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நான் பதிவிடவில்லை
பெரியார் சிலை உடைப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட கருத்து என்னுடையது அல்ல. என் அனுமதியின்றி எனது அட்மின் பதிவு செய்துவிட்டார் என்று எச் ராஜா விளக்கம் அளித்தார்.

காட்டுமிராண்டித்தனம்
இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். அவரது வருத்தத்தை என்னால் ஏற்க முடியாது என்றார். இந்நிலையில் ராஜாவின் கருத்து குறித்து ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று சொன்னதும், பெரியார் சிலையை உடைத்ததும் காட்டுமிராட்டித்தணமானது என்றார் ரஜினி.












Click it and Unblock the Notifications