சத்தமில்லாமல் நேபாளத்திற்கு ரூ.6 லட்சம் அளித்த ஹன்சிகா
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகை ஹன்சிகா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு ரூ.6 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
ஹன்சிகாவுக்கு வயசு தான் குறைவு ஆனால் பெரிய மனசு. அவர் தனது பிறந்தநாள் அன்று ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இது தவிர மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 10 பெண்களின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் மார்பக புற்றுநோய் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு ஹன்சிகா ரூ.6 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
நேபாள நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications