ஆர்.ஜே. பாலாஜியின் சுதந்திர தின ட்வீட்டை பார்த்தீர்களா?: நீங்க என்ன நினைக்கிறீங்க?
சென்னை: சுதந்திர தின பரிசாக இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டுத் துறை நிர்வாகிகள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பிரபல வானொலி அறிவிப்பாளர் பாலாஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வாங்க முடியாமல் இந்தியா திண்டாடுகிறது. குட்டி குட்டி நாடுகள் கூட தங்கப்பதக்கம் வென்று பெருமையடைந்துள்ளன.

மக்கள் தொகை அதிகம் உள்ள இரண்டாவது பெரிய நாடாக இருந்தும் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது மிக மிக கடினமாக உள்ளது. இதற்கு விளையாட்டுத் துறை நிர்வாகிகள் காரணம் என்றும் கூறப்படுகிறது.
On this Independence day, As a gift to the nation n to d future Indian olympians, Entire sports administrators in India shld resign.
— RJ Balaji (@RJ_Balaji) August 14, 2016
இந்நிலையில் பிரபல ஆர்.ஜே.வான பாலாஜி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியர்களுக்கு பரிசளிக்கும் விதமாக சுதந்திர தினத்தன்று இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டுத் துறை நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications