நாட்டில் தண்ணீரைவிட மதுபானம் தாராளமாக கிடைக்கிறது: சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: நமது நாட்டில் தண்ணீரை விட மதுபானம் தாரளமாக கிடைக்கிறது என்று உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மதுவிலக்கை ஏன் அமல்படுத்த கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மதுவிலக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த மணிவிழி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''நாட்டில் தண்ணீரைவிட மதுபானம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. மதுபானக் கடைகள் திறந்து இருக்கும் நேரத்தை ஏன் குறைக்கக் கூடாது?
வருமானத்துக்கு அரசுகள் வேறு வழியை யோசிக்க வேண்டும். குடிபோதையில் வாகன விபத்து என அரசுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை அரசு திறந்து வைத்து இருப்பது ஏன்?" என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.












Click it and Unblock the Notifications