ஆதிபராசக்தி கல்லூரி பிரச்சினை... 21 மருத்துவ மாணவர்கள் பயிற்சியை நிறைவு செய்ய ஹைகோர்ட் அனுமதி
சென்னை: சென்னைக்கு அருகே மேல்மருவத்தூரில் தனியார் மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட 21 மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரியில் பயிற்சியை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி இயங்கி வந்தது. கடந்த 2014-15ம் ஆண்டில் சிலப்பல காரணங்களால் அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்தக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த 21 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நிவேதா என்பவர் உட்பட 21 மருத்துவ மாணவர்களும் சென்னை ஹைகோர்ட்டில் தங்களுக்கு நியாயம் வேண்டி மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், ‘இறுதி ஆண்டுப் படிப்பை முடித்த நாங்கள், சி.ஆர்.ஆர்.ஐ என்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சி முடிந்த பின்னரே நிரந்தர பதிவு எண் வழங்கப்படும். ஆனால், எங்களது கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்தப் பயிற்சியை எங்களாம் மேற்கொள்ள இயலவில்லை. எனவே, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்திருத்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுரேஷ், ‘பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது மருத்துவ பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட வேறு மருத்துவக் கல்லூரிகளில் தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலரிடம் ஒரு வாரத்திற்குள் கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து அந்த மனுவின் அடிப்படையில் அம்மாணவர்களை எந்த மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற அனுமதிக்க முடியும் என்ற விவரத்தை தமிழ்நாடு மருத்துவக் கல்வி கவுன்சிலுக்கு சுகாதாரத்துறை செயலர் இரண்டு வாரத்திற்குள் கடிதம் வாயிலாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியைப் பெற ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியிடமிருந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் யாரும் தடையில்லா சான்றிதழ் எதையும் பெறத் தேவையில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications