இரட்டை இருப்பிடச் சான்று அரசாணையில் தெளிவில்லை - ஹைகோர்ட் இடைக்கால தடை
இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணைக்கு ஹைகோர்ட் மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை : இரட்டை இருப்பிடச் சான்று இருந்தாலும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்று வெளியிடப்பட்ட அரசாணைக்கு ஹைகோர்ட் மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நீட் தேர்வில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிபோனதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதே போன்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் பூதாகரமாக வெடித்த மற்றொரு விஷயம் வெளி மாநில மாணவர்கள் இரட்டை இருப்பிட சான்றிதழ் அளித்து மருத்துவ இடம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது போன்று இரட்டை இருப்பிட சான்றிதழ் அளித்தாக 9 பேரிடம் விசாரணை நடப்பதாக சுகாதாரத்துறை அமைச்சரும் கூறியிருந்தார். இந்நிலையில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரட்டை இருப்பிட சான்றிதழ் விவகாரம் குறித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் இரட்டை இருப்பிட சான்றிதழ் தொடர்பான அரசாணையில் தெளிவு இல்லை என்றும், இரட்டை இருப்பிட சான்றிதழ் இருந்தாலும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்று சுகாதாரத் துறை வெளியிட்ட அரசாணைக்கு தடை கோரியும் மனு தொடர்ந்திருந்தார்.
இரட்டை இருப்பிட சான்றிதழை அனுமதித்தால் தமிழக மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோனதாகவும் வெளி மாநில மாணவர்களே அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் தியாகராஜன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன் சுவாமிநாதன் அமர்வு முன்பு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் 3 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications