சிறுவனைக் கொடூரமாக கொன்ற பூவரசி... ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஹைகோர்ட்
சென்னை: சென்னையில் ஆதித்யா என்ற 4 வயது சிறுவனை கொடூரமாகக் கொன்று உடலை சாக்குப் பையில் போட்டு பஸ்சில் உடலை அனுப்பி வைத்த பூவரசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர். இவரது மனைவி அனந்தலட்சுமி. இருவரும் காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது மகள் நிவேதிதா (8). மகன் ஆதித்யா (4).

ஜெயக்குமார் பணியாற்றிய நிறுவனத்தில், ஆரணியை சேர்ந்த பூவரசி என்பவரும் பணியாற்றினார். இருவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டது. கள்ளக்காதலாக மாறியது. பூவரசி கர்ப்பமானார். அதை ஜெயக்குமார் கட்டாயத்தின் பேரில் கலைத்துள்ளார்.
இந்த நிலையில் தன்னை 2வது திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரை நெருக்க வந்தார் பூவரசி. ஆனால் ஜெயக்குமார் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த பூவரசி, ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை 2010ம் ஆண்டு ஜூலை 17ம் தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து சென்றார்.. அங்கு வைத்து சிறுவனை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். உடலை சூட்கேசில் வைத்து, நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் வைத்துவிட்டார்.
பின்னர் சிறுவனை யாரோ கடத்தி விட்டதாக கூறி நாடகம் போட்டார். போலீஸ் விசாரணையில் பூவரசியின் குட்டு உடைந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கை விசாரித்த சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் 2011ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பூவரசி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நாகமுத்து ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த தீர்ப்பில், சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் போலீசார் நடத்திய புலன் விசாரணையில் சிறு குறைபாடுகள் இருந்தாலும், அது வழக்கின் தன்மையை பாதிக்கவில்லை. சிறுவனை பூவரசி தான் கொலை செய்துள்ளார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி போலீசார் நிரூபித்துள்ளனர். எனவே, அவருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனை சரியானதுதான்.
அதேநேரம், பூவரசிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அந்த அபராத தொகையை ரூ.50 ஆயிரமாக குறைக்கிறோம். பூவரசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications