கொல்கத்தா நீதிமன்றத்துக்கு மாற்றிய உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் தடை- தலைமை நீதிபதி பதிலளிக்க உத்தரவு
சென்னை: தம்மை கொல்கத்தா நீதிமன்றத்துக்கு இடம் மாற்ற செய்த தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் இடைக்கால தடை விதித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதிலளிக்கவும் நீதிபதி கர்ணன் நோட்டீஸ் உத்தரவிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்து தலைமை நீதிபதி தாக்கூர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாம் போராடப் போவதாகவும் நீதிபதி கர்ணன் கூறியிருந்தார்.
இந்நிலையில் நீதிபதி கர்ணனுக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே தமது இடம் மாற்றம் தொடர்பான உத்தரவு குறித்து தாமே விசாரித்த நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்துள்ளார்.
அத்துடன் இந்த உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.