மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும் மத்திய பாதுகாப்புப் படை- இன்று முதல் அமல்
மதுரை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று முதல் மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை அமல்படுத்த உத்தரவிட்டது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று முதல் மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது.
இதற்காக 200 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மதுரை கிளைக்கு நேற்று வருகை தந்தனர். இந்த பாதுகாப்புப் படையினரின் சோதனைக்குப் பிறகே நீதிமன்றப் பகுதிக்குள் எவரும் செல்ல முடியும்.
தனி அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே நீதிமன்ற பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நீதிமன்றத்தைச் சுற்றிலும் தொழில் பாதுகாப்பு படையினர் இருசக்கர வாகனம் மற்றும் ஜீப்களில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புக்காக தமிழக அரசு ரூ80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. நீதிமன்றத்தின் வெளிப்பகுதிகளில், மதுரை மாநகர காவல்துறையினரின் கண்காணிப்பு வழக்கம்போல இருக்கும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications