ரூ 6 கோடி கையாடல் வழக்கு... நாசர், விஷால், கார்த்தியிடம் விசாரணை நடத்த ஹைகோர்ட் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் திரட்டிய பணத்தில் ரூ 6 கோடி கையாடல் நடந்ததாக நடிகர் வாராகி தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்கம் தேர்தலில் விஷால் அணியினர் வெற்றிப் பெற்றதும், கட்டடம் கட்ட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தினர். இதில் திரட்டப்பட்ட பணத்தில் ரூ 6 கோடி வரை கையாடல் செய்ததாக தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குத் தொடர்ந்தார் நடிகரும் இயக்குநருமான வாராகி.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் உடனடியாக விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications