Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அரசு தயக்கம் காட்டுவது ஏன்?: ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதில் என்ன சிக்கல் என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகியோர் கடந்த ஜனவரி 23ம் தேதி கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மாணவிகளின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் மோனிஷாவின் உடல் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

HC orders for re postmortem on Saranya

இதேபோல் சரண்யாவின் உடலையும் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக்கோரி அவரது தந்தை ஏழுமலை, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை செவ்வாய் கிழமையன்று தனி நீதிபதி ஆர்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களை கேட்டபிறகு தனி நீதிபதி மாலா அளித்த உத்தரவில், ‘மோனிஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதற்காக, சரண்யாவின் உடலையும் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட முடியாது. மேலும் உடல் புதைக்கப்பட்டு 9 நாட்கள் கழித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம், வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை வரும் பிப்ரவரி 12ம் தேதி அரசுத் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சரண்யாவின் தந்தை ஏழுமலை, சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நேற்று மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பாக வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி, ‘இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து இன்றே விசாரிக்க வேண்டும்' என்று தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தரேசன் ஆகியோர் முன்பு கேட்டு கொண்டார். இதை கேட்ட நீதிபதிகள், இன்று வழக்கை எடுத்து கொள்ள முடியாது வியாழக்கிழமை விசாரிக்கிறோம் என்றனர்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமார்வு முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தன் மகளின் சாவில் மர்மம் உள்ளது என்று மனுதாரர் கூறுகிறார். மறு பிரேத பரிசோதனை கேட்கிறார். இதற்கு அரசு தரப்பில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்கள்.

பின்னர் நீதிபதிகள், ‘சரண்யாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடுகிறோம். உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளிலேயே டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்யலாம். மனுதாரர் தன் தரப்பு டாக்டர் ஒருவரை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் குழுவில் இடம் பெற செய்யவேண்டும் என்கிறார். இதை ஏற்க முடியாது. வேண்டுமென்றால், அவர் தரப்பு டாக்டர் ஒருவர், பிரேத பரிசோதனை செய்யும்போது, அவற்றை கண்காணிக்கலாம். இதுகுறித்து விரிவான உத்தரவை பின்னர் பிறப்பிக்கின்றோம்' என்று தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+