Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னிக்கு முன்பே தகிக்கும் சூரியன்.. வறுத்தெடுக்கப்படும் வாகன ஓட்டிகள்.. ஃபேன், ஏசிக்கு ஓவர்டைம்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் அனல்காற்று வேறு வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் தகித்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அக்னி தொடங்கினால் தம் நிலை என்னவாகுமோ என்று பீதியில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது வெப்பம் தகித்து வருகிறது. வடகினக்கு பருவமழை பொய்த்துபோனதால் ஆங்காங்கே கடும் வறட்சி நிலவி வருகிறது. இதுபோதா குறைக்கு தண்ணீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.

தினமும் காலிக்குடங்களுடன் மக்கள் வீதிவீதியாக தண்ணீருக்காக அலைந்து திரிந்து வருகின்றனர். இதை போக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

 சதம் அடிக்கும் வெயில்

சதம் அடிக்கும் வெயில்

வேலூர், கரூர், நெல்லை, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெப்பம் 100 பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி உள்ளது. பிற மாவட்டங்களில் 90-க்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனால் வெளியே தலை காட்ட முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

 அனல்காற்று

அனல்காற்று

இந்நிலையில் கொதிக்கும் அளவுக்கு அனல் காற்று வீசுவதால் அலுவல் நிமித்தமாக இரு சக்கர வாகனங்களிலும், பேருந்துகளிலும் செல்லும் மக்கள் அவதி அடைகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி செல்வதை காண முடிகிறது.

 நிழலை தேடி அலையும் நிலை

நிழலை தேடி அலையும் நிலை

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முக்கிய சாலைகளில் கானல் நீர் தோன்றுகிறது. பொதுவாக வெயிலில் இருந்து காத்துக் கொள்ள மரத்தின் நிழல்களை தேடுவது வழக்கம். ஆனால் வர்தா புயலால் சென்னையில் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதால் தற்போது நிழலைத் தேடி அலைந்து திரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

 காளான் போல் முளைத்துள்ள கடைகள்

காளான் போல் முளைத்துள்ள கடைகள்

வெயிலின் தாக்கத்தினால் தர்ப்பூசணி, கிர்னி பழம், மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றின் விற்பனை ஜரூராக உள்ளது. இதனால் ஆங்காங்கே காளான் போல் ஜூஸ் கடைகள் முளைத்துள்ளன. சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மதிய நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகிறது. வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி. ஆகியவை ஓய்வு இல்லாமல் ஓவர் டைம் பார்க்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+