புயலே வந்தாலும் மழை இல்லையே.. இந்த 10 மாவட்டங்களில் அடிக்க போகுது அனல் காற்று
10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனல்காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: மழை வர போகுது, புயல் வரப் போகுது என்ற செய்திகள் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தில் அனல் காற்றும் பலமாக வீசப் போகிறதாம்.
தென்மேற்கு பருவமழை எப்பவுமே ஜூன் ஆரம்பத்திலேயே தொடங்கிவிடும். ஆனால் இந்த முறை லேட்டாகவே தொடங்கியது. முதலில் கேரளாவில் ஆரம்பித்தது.

அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் இன்று புயல் உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்களையும் 3 நாட்களுக்கு அரபிக்கடல் பக்கம் போக வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புயலால் ஒரு சில கடலோர பகுதிகளில் மட்டும்தான் மழை. மற்றபடி உள் தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும்படி மழை இருக்காது.
மழை இல்லை என்பதைவிட அனல் காற்று வீசும் என்ற தகவல்தான் இப்போது வந்துள்ளது. அதிலும், 10 மாவட்டங்களில் அனல் காற்று பலமாக இருக்குமாம்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னைவாசிகள் நிலைமை பரிதாபம்தான். ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் நிலை உள்ளது. இதில், கடலில் புயலே வந்தாலும், சென்னையில் மழை இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது. அதிலும் அனல் காற்று வீசும் மாவட்டங்களில் முதலில் உள்ளது சென்னைதான்!
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications