தொடர் மழையால் கடல் அரிப்பு... தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: நெல்லை அருகே உள்ள பெரியதாழை கடற்கரை பகுதியில் பலத்த மழை காரணமாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் அரிப்பும் ஏற்பட்டு வருவதால் மீனவர்கள் திண்டாடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகி்ன்றனர். சுமார் 400க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் இவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Heavy rain causes sea erosion in Thoothukudi

பெரியதாழையில் கடலில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் அங்கு இரண்டு தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஓதுக்கியது.

இதற்கான பணிகள் தொடங்க இருந்த வேளையில் தூண்டில் வளைவு அமைய உள்ள இடம் தொடர்பாக மீனவர்களுக்குள் பிரச்சனை உண்டாகி பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

இதனால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பால் ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தால் மீனவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கடலில் சீற்றமாக இருப்பதால் கடல் அலைகள் அக்ரோஷமாக கரையை நோக்கி வந்து செல்கின்றன. இதனால் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த மண் அரிப்பால் படகுகளை கரையில் நிறுத்த முடியவில்லை. அவற்றை பாதுகாப்பாக மீனவர்கள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்தனர். இதனால் பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+