சென்னையில் கொட்டு கொட்டுன்னு கொட்டும் மழை: மூன்றே மணிநேரத்தில் 106 மி.மீ.
சென்னை: சென்னையில் இன்று காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காட்டுப்பாக்கத்தில் 3 மணிநேரத்தில் 106 மிமீ மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
The rain doesn't show signs of stopping. Here are some shocking images#ChennaiRains @ChennaiRains @chennaiweather 🙏 pic.twitter.com/zHQa41uSeJ
— BalaguruSivam (@BalaguruSivam) December 1, 2015 தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 8.30 மணியில் இருந்து 11.30 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக கே.கே. காட்டுப்பாக்கத்தில் 106 மிமீ மழை பெய்துள்ளது.
Rainfall in and around Chennai till 11:30 AM today (3 hours) #ChennaiFloods #chennairains pic.twitter.com/nuOdEEVMpb
— ChennaiRains (@ChennaiRains) December 1, 2015 3 மணிநேரத்தில் செம்பரபாக்கத்தில் 93 மில்லி மீட்டர் மழையும், புழலில் 80 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 71 மில்லி மீட்டரும், பூந்தமல்லியில் 66 மில்லி மீட்டரும், எல்எம்ஓஐஎஸ் கொலப்பாக்கத்தில் 65 மில்லி மீட்டரும், மாதவரத்தில் 61 மில்லி மீட்டரும், தரமணியில் 57 மில்லி மீட்டரும், இந்துஸ்தான் பல்கலைக்கழக பகுதியில் 47 மில்லி மீட்டரும், எண்ணூர் துறைமுகத்தில் 23 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
மேலும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை அண்ணா பல்கலைக்கலழக பகுதியில் 54 மில்லி மீட்டரும், சென்னையில் 44 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications