"கடலோர தமிழகம், தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும்"
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடலோரத் தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,இலங்கையில் உருவான தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து கன்னியாகுமரியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும்.

சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் மழை பெய்யும்.
24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குழித்துறையில் 7 செ.மீட்டரும், இரணியலி்ல் 6 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக கூறினார் ரமணன்.
இன்று காலை வரை சென்னையில் லேசான மழை இருந்தது. பிற்பகலுக்கு மேல் மழை இல்லை. வானம் மூடிக் கிடக்கிறது. இரவில் மழை வரலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications