For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கடலோர தமிழகம், தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும்"

Google Oneindia Tamil News

சென்னை: கடலோரத் தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,இலங்கையில் உருவான தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து கன்னியாகுமரியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் கனமழை நீடிக்கும்.

Heavy rain to lash coastal TN in another 24 hrs: Wet office

சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் மழை பெய்யும்.

24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குழித்துறையில் 7 செ.மீட்டரும், இரணியலி்ல் 6 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக கூறினார் ரமணன்.

இன்று காலை வரை சென்னையில் லேசான மழை இருந்தது. பிற்பகலுக்கு மேல் மழை இல்லை. வானம் மூடிக் கிடக்கிறது. இரவில் மழை வரலாம் என்று தெரிகிறது.

English summary
Weather office has predicted that, heavy rain may lash coastal TN in another 24 hrs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X