சென்னையில் பின்னி பெடலெடுக்கும் மழை... சாலைகளில் தேங்கிய மழை நீர்!
Recommended Video

சென்னை: சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே ஆங்காங்கே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
[ பலத்த மழை: திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், புதுவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! ]
இதையடுத்து அடையாறு, பட்டினப்பாக்கம், மாம்பலம், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், தாம்பரம், ஆவடி, முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதிஅடைந்துள்ளனர். ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் மழை பெய்கிறது.












Click it and Unblock the Notifications