நாகை, காரைக்காலில் பேய் மழை.... காலை முதல் வெளுத்துக் கட்டுகிறது
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்: நாகை மாவட்டத்தில் காலை முதல் பேய் மழை கொளுத்துகிறது. அதேபோல புதுவை மாநிலம் காரைக்காலிலும் மழை வெளுத்து வாங்குகிறது.
நாகப்பட்டனம் மாவட்டத்தில் இன்று மீண்டும் கன மழை தொடங்கியுள்ளது. பேயாக கொட்டி வருகிறது அங்கு மழை. மிகவும் பலத்த மழை பெய்து வருவதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பிற்பகலுக்கு மேல் மழை வலுத்தது. மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.
அதேபோல காரைக்காலில் காலை முதல் மழை பெய்து வருகிறது. விடாமல் அங்கு கன மழை பெய்து கொண்டிருக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஊரே இருண்டு போய்க் காணப்பட்டது. மிகவும் பலமாக மழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் போய் விட்டது.












Click it and Unblock the Notifications