தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழையால் சட்டப்படிப்பு தேர்வுகள் ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று நடக்கவிருந்த சட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Heavy rain: Law exams postponed

சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக இன்று நடக்கவிருந்த 3ம் ஆண்டு மற்றும் 5ம் ஆண்டுக்கான சட்டப்படிப்பு பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.

கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+