தொடரும் கனமழை: பாபநாசம் அணை கிடுகிடு உயர்வு
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கனமழை நீடிப்பதால் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து பாபநாசம் அணைப்பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
சென்னையில் அடையாறு, வடபழனி, கிண்டி, தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு 9 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மரம் விழுந்து விபத்து
கனமழையின் காரணமாக ஆழ்வார்பேட்டை அருகே மாநகரப்பேருந்து மீது மரம் விழுந்ததில், ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் மழையினால், அலுவலகம் முடித்துவிட்டு இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு திரும்பியோர் நனைந்தபடியே செல்ல நேர்ந்தது.
தென்மேற்குப் பருவமழை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலமாகும். இந்த மழை சுமார் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ நெல் சாகுபடி செய்யப்படும். ஆனால் இந்தாண்டு பருவமழை சரியாக பெய்யாததால் கார் பருவ சாகுபடி நடைபெறவில்லை.
மேற்கு தொடர்ச்சி மலையில்
இந்த நிலையில் பருவ மழை காலம் முடிந்த நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபாநாசம் அணை
பாபநாசம் அணையில் 93.45 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 95.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 2 ஆயிரத்து 72 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 105.97 அடியாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் விரைவில் பாபநாசம் அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறைந்த குண்டாறு
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. இந்த அணையின் நீர்மட்டம் 36.10 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
நீர்மட்டம் உயர்வு
அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 112.50 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 113 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது அணைப்பகுதிகளில் மழை இல்லை. எனினும் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கனமழை நீடிப்பு
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், கொடைக்கானலிலும் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெப்ப சலனம் காரணமாக மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications