நெல்லையில் குளு குளு கனமழை… சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் வாட்டி வதக்கி வருகிறது. தமிழகத்தின் ஒரு பகுதியில் அனல் காற்று வீசி வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

நாளை மறுநாள் அக்னி வெயில் வாட்டி எடுக்கும் என்ற அறிவிப்பு வந்துள்ள நிலையில், வெப்ப சலனம் காரணமாக பெய்து வரும் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை

மழை

இன்று காலையில் இருந்து வெயில் காய்ந்து வந்த நிலையில் பிற்பகலில் நெல்லையில் மேக மூட்டம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து நல்ல மழை நெல்லை தென்காசி, செங்கோட்டை, விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்ந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழை

கனமழை

இதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. களியல், கடையால், பேச்சிப்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை பெய்துள்ளது.

வேலூர்

வேலூர்

வேலூர் மாவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல்

நாமக்கல்

இதே போன்று, நாமக்கல் மாவட்டத்தையும் நனைத்து குளிர்ச்சியாக்கியுள்ளது மழை. ராசிபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை பெய்துள்ளது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+