For Daily Alerts
Just In
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் “மழை” பெய்யுமாம் – சொல்கிறது வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெருங்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த மழை 2 அல்லது 3 நாட்கள் நீடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை வரும் ஜூன் 5 ஆம் தேதி கேரளாவில் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
English summary
Heavy rain fall in Tamil Nadu within 24 hours, Metrological center says.
Story first published: Tuesday, June 2, 2015, 11:06 [IST]