கொட்டித் தீர்க்கும் மழை: 'நவம்பர் ரிப்பீட்' ஆகிவிடுமோ என பயத்தில் சென்னைவாசிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வெளுத்து வாங்கும் மழையை பார்த்த சென்னை மக்களுக்கு கோடை வெயில் தணிந்த மகிழ்ச்சியை விட மீண்டும் வெள்ளம் வந்துவிடுமோ என்ற பயம் தான் அதிகம் உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. வீடுகளில் சிக்கிய மக்களை படகுகள் மூலம் மீட்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.

அந்த பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளனர்.

தொடர் மழை

தொடர் மழை

கத்திரி வெயிலை தாங்க முடியாமல் திணறிய சென்னை மக்களை மகிழ்விக்கும் வகையில் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரமணாக சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

புயல்

புயல்

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பயம்

பயம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையை பார்க்கும் சென்னை மக்களுக்கு கத்திரி வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிய மகிழ்ச்சியை விட எங்கே மீண்டும் வெள்ளம் வந்து வீடுகள் மூழ்கும் நிலை ஏற்படுமோ என்ற பயம் தான் அதிகம் உள்ளது.

மழை

மழை

நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது பெய்யும் மழையின் தீவிரம் குறைவு என்றாலும் சென்னைவாசிகளை பயம் ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தண்ணீர் தேங்கும் பகுதிகளில் மக்களை மீட்க 25 படகுகள் தற்போதே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+