சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: தீபாவளிக்காக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள் அதிகரிப்பால் பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளிக்காக, சென்னையில் இருந்து வெளியூருக்கு சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவருகிறது. இதன்படி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், மன்னார்குடி ஆகிய ஊர்களுக்கு தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், கோயம்பேட்டில் இருந்து மதுரை, திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, ஆகிய தென்மாவட்ட ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்த பயணிகளுக்காக வண்டலூர் அருகில் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்ட தாற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பேருந்து, ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமானோர் கார்களில் குடும்பம் குடும்பமாக கிளம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள் இன்று அதிகளவில் காணப்பட்டது. பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளாதல், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்ல 2 மணிநேரம் ஆவதால் பயணிகள் அவதி கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications