திடீர் மழையால் சென்னையின் பல இடங்களில் ட்ராபிக் ஜாம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்களால் மக்கள் அவதி!
சென்னையில் திடீரென பெய்த மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: திடீரென பெய்த மழையால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பிற்பகலுக்குப் பிறகு திடீரென மேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து சில்லென காற்று வீசி வருகிறது. மழையால் இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடம்பாக்கத்தில் மழை
சென்னை போரூர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
அரும்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் ட்ராபிக்
சென்னை அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், தியாகராய நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அலுவலகம் சென்றவர்கள் மற்றும் பள்ளி கல்லூரிக்கு சென்றவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.