சென்னையில் தொடரும் மழை.. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. மக்கள் அவதி!
சென்னையில் தொடரும் மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தொடரும் மழை காரணமாக மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்துவரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், வடபழனி வளசரவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிண்டி, மீனம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் காலையில் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி சென்றவர்கள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் தற்போதும் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. இதனால மாலையில் வீடு திரும்புபவர்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications