18 ஆண்டுகளுக்கு முன்.. 108 நாட்கள்... வீரப்பன் பிடியில் சிக்கித் தவித்த ராஜ்குமார்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய வீரப்பன்... திக் திக் கதை
கோபி: 18 ஆண்டுகளுக்கு முன்பு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நடந்த முக்கிய திருப்பங்கள் என்னென்ன.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடத்தல் முதல் இன்ரு வரை நடந்த சம்பவங்கள் என்னென்ன என்பதை காண்போம்.

- ஜூலை 30, 2000- தலவாடியில் காஜனூர் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார்.
- நவம்பர் 15, 2000- நடிகர் ராஜ்குமாரை விடுவித்தார் சந்தன கடத்தல் வீரப்பன். வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளி மீது தலவாடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
- அக்டோபர் 2004- சிறப்பு படையினரால் வீரப்பன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஏப்ரல் 12, 2006- ராஜ்குமார் உடல்நலக் குறைவால் காலமானார்.
- செப். 24, 2018- கோவிந்தராஜ், அந்தில், பசுவன்னா, குப்புசாமி, கல்மாடி ராமன் உள்ளிட்டோர் கோபி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
- செப். 25, 2018- ராஜ்குமார் கடத்தல் வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications